கணவனை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

72பார்த்தது
கணவனை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி
கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த சாந்தா என்ற பெண் தனது முதல் கணவர் மறைவுக்கு பிறகு ரத்னாகரன் என்பவரை மறுமணம் செய்தார். நேற்றிரவு 10 மணிக்கு மது போதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த சாந்தா இரும்பு கம்பியால் கணவர் தலையில் ஓங்கி அடித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி ரத்னாகரன் உயிரிழந்தார். போலீசார் சாந்தாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி