கோவிலுக்கு சென்ற மாணவர் பரிதாப பலி

67பார்த்தது
கோவிலுக்கு சென்ற மாணவர் பரிதாப பலி
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்டியங்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் வீரமணி(வயது17). பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவரும் இவர், நேற்று அவர் கன்டியங்காட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று, கோவிலில் குடமுழுக்கு விழாவுக்கான பணிகள் செய்து வந்தார். அப்போது அவர் கோவிலை சுத்தம் செய்வதற்காக எந்திரம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயர் மீது எதிர்பாராதவிதமாக தண்ணீர் பட்டதில் மாணவர் வீரமணி தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு வீரமணி பாதி வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி