காதலனுடன் மனைவி உல்லாசம்.. தீர்த்துக்கட்டிய கணவன்!

67பார்த்தது
காதலனுடன் மனைவி உல்லாசம்.. தீர்த்துக்கட்டிய கணவன்!
உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கராரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அதாரா கிராமத்தில் மனைவியின் கள்ளக்காதலனை கணவர் கொலை செய்துள்ளார். ரஞ்சித் என்ற நபர் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். கௌசாம்பியில் உள்ள இவரது மனைவிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இம்மாதம் 16ஆம் தேதி விஜய்யுடன் தனது அறையில் உல்லாசமாக இருந்தபோது மும்பையில் இருந்து ரஞ்சித் திடீரென வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ரஞ்சித் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து, இரவில் அங்கிருந்து வெளியே சென்ற விஜய்யை கொன்று, சடலத்தை வேறு பகுதியில் வீசி சென்றுள்ளார். போலீஸ் விசாரணையில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றவாளியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி