இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிகவிடம் ஆதரவு கோரிய சீமான்

55பார்த்தது
இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிகவிடம் ஆதரவு கோரிய சீமான்
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மருத்துவர் அபிநயாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று, விக்கிரவாண்டி வட்டாச்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தாமல் இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக, தேமுதிக இந்த முறை எங்களுக்கு துணையாக நின்று வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

சீமான் செய்து தோற்றிருக்கலாம், ஆனால் அகிலேஷ் யாதவ் எங்களின் கொள்கையை பின்பற்றி வென்றிருக்கிறார். ராமர் கோவில் இருக்கும் பொதுத் தொகுதியான அயோத்தியில் தாழ்த்தப்பட்ட ஒருவரை நிறுத்தி வென்றுவிட்டார். அதை நாங்கள் இந்த தமிழ் நிலத்திலும் செய்து காட்டுவோம் என்றார்.

தொடர்புடைய செய்தி