அதிமுகவினர் நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட்!

73பார்த்தது
அதிமுகவினர் நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட்!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்த அதிமுகவினர் நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பேரவை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் அதிமுக உறுப்பினர்களை தற்காலிக இடைநீக்கம் செய்ய வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்துள்ளார். அவைக்காவலர்கள் மூலம் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுகவினர், பேரவை வளாகத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி