முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வலுக்கும் குரல்

61பார்த்தது
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வலுக்கும் குரல்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராயாத்தால உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். சாராயம் குடித்து இதுவரை 35 பேர் பலியாகியுள்ள நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் 70-க்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக, பாமக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே போல், எக்ஸ் தளத்தில், #Resign_Stalin என்ற ஹேஷ்டேக்-ஐ டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி