கேரளா மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்தவர் பி.டி. உஷா. சிறுவயது முதலே ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்ட இவர், உலகளவில் இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்றுள்ளார். சர்வதேச தடகள அரங்கில் தனது பெயரை நிலைநாட்டிய பி.டி.உஷா, 103 பதக்கங்களை வென்றுள்ளார். 2022ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான முதல் பெண்மணி என்ற பல சாதனைகளை பி.டி. உஷா படைத்துள்ளார். விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு பி.டி. உஷா எப்போதும் ஒரு முன்னுதாரணம்தான்.