மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 'புஷ்பா' பட நடிகர்

64பார்த்தது
மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 'புஷ்பா' பட நடிகர்
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனின் நண்பனாக நடிகர் கேசவ் என்பவர் நடித்து இருப்பார். ஜூனியர் நடிகை ஒருவரை புகைப்படம் எடுத்து இவர் மிரட்டியதால், அப்பெண் தற்கொலை செய்துகொண்டதாக இவர் மீது ஒரு வழக்கு உள்ளது. இதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற இவரை, படக்குழு பல லட்சம் செலவு செய்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்ததாக தகவல் வெளியானது. கேசவ் சிறைக்கு சென்றுவிட்டதால் புஷ்பா-2 படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இதன் காரணமாகவே படக்குழு அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தனர். இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி கேசவா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி