காவலர் திடீர் மரணம்

4485பார்த்தது
காவலர் திடீர் மரணம்
விழுப்புரம்: அகரம் சித்தாமூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன் விவசாயி. இவருடைய மகன் பார்த்தசாரதி (37), இவர் 2010ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் மரக்காணம் காவல் நிலையத்திற்கு பணிக்கு வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்துள்ளது. நேற்றிரவு மரக்காணம் காவல் நிலைய குடியிருப்பில் தங்கியிருந்த பார்த்தசாரதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

தொடர்புடைய செய்தி