மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்த பிரதமர் மோடி!

64415பார்த்தது
நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவின் திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களுக்கு மலர் மாலை எடுத்துக் கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த திருமண சடங்கில் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், திலீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குருவாயூர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் மேற்கொண்ட பிறகு திருமண விழாவில் பிரதமர் பங்கேற்றார். முக்கிய பிரமுகர்கள் வருகையையொட்டி, ஆயிரக்கணக்கில் பாஜகவினரும், பொதுமக்களும் திரண்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி