இந்தியா மீண்டும் ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ரவி

53பார்த்தது
இந்தியா மீண்டும் ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ரவி
இந்தியா தற்போது மீண்டும் ராமர் மயமாகி வருகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தனது மனைவியுடன் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலில் தாயர் சன்னிதி அருகே உள்ள ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் இணைந்து தண்ணீர் ஊற்றி துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது, நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி