மேற்குவங்கம் - ராணிகஞ்ச் நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கொள்ளையர்கள் நகைக்கடையில் இருந்தவர்களை பணயக்கைதிகள் போல் பிடித்து அமர வைத்துவிட்டு துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி திருட்டைத் தடுக்க காவலர் முயன்றதால் எதிர்த் தாக்குதல் நடத்தி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.