உத்தரபிரதேசம் தானா பல்தேவ் பகுதி வசித்து வரும் இளைஞரின் வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். ஆனால், நீதிமன்ற உத்தரவு இன்னும் வரவில்லை என கூறி இளைஞர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அந்த இளைஞரை அரை நிர்வாணத்தோடு சாலையில் இழுத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் போலீசாரின் காலைப் பிடித்து கெஞ்சியும் அவரை விடவில்லை. அந்த இளைஞரை தரதரவென இழுத்து காரில் ஏற்றிச் சென்றனர்.