தக்காளியை இரவு முழுக்க காவல் காத்த போலீஸ்

59பார்த்தது
உ.பி. கான்பூர் அருகே சாலையில் கிடந்த தக்காளிகளுக்கு இரவு முழுவதும் போலீஸ் காவல் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 18 டன்கள் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த லாரியின் குறுக்கே பசுமாடு வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் தக்காளி முழுவதும் சாலையில் கொட்டியது. தக்காளி விலை கிலோ ரூ.100 வரை விற்கப்படும் நிலையில், தக்காளிகள் திருடுபோகும் அபாயம் இருக்கிறது. எனவே சாலையிலேயே தக்காளிகளுக்கு இரவு முழுவதும் போலீசார் காவல் இருந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி