மது விலக்கை நடைமுறைப்படுத்துவதே நிரந்தர தீர்வு : திருமாவளவன்

67பார்த்தது
மது விலக்கை நடைமுறைப்படுத்துவதே நிரந்தர தீர்வு : திருமாவளவன்
கள்ளக்குறிச்சியில் நச்சு சாராயத்தால் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதற்கு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே இக்கொடுமையைத் தடுக்கும் நிரந்தரத் தீர்வு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பேரவலம் நாட்டைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் குரூரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முழு மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்‌.

தொடர்புடைய செய்தி