கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு!

59பார்த்தது
கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை இன்று காலை 10.30 மணி நிலவரப்படி 58 ஆக உயர்ந்துள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட 140க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 56 பேர் நேற்று வரை உயிரிழந்த நிலையில், இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்தார். தொடர் உயிரிழப்புகளால் கருணாபுரமே மயானக் காடாக காட்சியளிக்கிறது. இதில் தொடர்புடைய 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி