விஷச்சாராய மரணங்கள் பாஜகவின் சதி - திமுக குற்றச்சாட்டு

51பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு பாஜகதான் விஷச்சாராய சதிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தாம் சந்தேகிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டினார். இன்று (ஜூன் 23) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக ஆளும் மாநிலத்தில் இருந்து மெத்தனால் வந்துள்ளது என்றால் இடைத்தேர்தலுக்காக இந்த சதித்திட்டம் நடந்ததோ என்கிற சந்தேகம் எழுகிறது, ரயில் விபத்துகள், நீட் மரணங்களின் போது அமைச்சர்களோ, பிரதமரோ ராஜினாமா செய்தார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி