ஜேடிஎஸ் எம்எல்சி சூரஜ் ரேவண்ணா கைது

82பார்த்தது
ஜேடிஎஸ் எம்எல்சி சூரஜ் ரேவண்ணா கைது
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்சி சூரஜ் ரேவண்ணாவை போலீசார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். தன்னை இயற்கைக்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹொலனர்சிபூர் கிராமிய காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட இளைஞரின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்ட இளைஞரின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இயற்கைக்கு மாறான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் எம்எல்சி சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக இவரது சகோதரரும், முன்னாள் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி