ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றியை மட்டுமே கண்ட தலைவர் கலைஞர் என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் இன்று (ஜுன் 3) செய்தியாளர்களை சந்தித்த அவர், 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும். கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் கலைஞர் அவர்கள் தான். ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றியை மட்டுமே கண்ட தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைய நாளில் அவரை கொண்டாடி வருகிறோம். மகத்தான வெற்றியை நாளை 40 தொகுதிகளிலும் திமுக வெல்லும். இதனை மக்கள் கொடுப்பார்கள் என கூறினார்.