மயங்கி விழுந்த குரங்குக்கு ஓஆர்எஸ் கொடுத்த மக்கள்.!

57பார்த்தது
முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்தியாவை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இணையத்தில் பரவி வரும் வீடியோவில் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் குரங்கு ஒன்று வெயிலால் ரோட்டில் மயங்கி விழுந்தது. இதை கவனித்த கிராம மக்கள் சிலர் அதன் முதுகில் குளிர்ந்த நீரை ஊற்றினர். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்த குரங்குக்கு மக்கள் ஓஆர்எஸ் கரைசலை குடிக்க கொடுத்துனர்.