வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று (மார்ச் 27) வெயில் கடுமையாக சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் அறிவித்துள்ளார். இன்று முதல் 31ஆம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை (107°F மேலாக) பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.