மும்பை - புனே நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது சகஜம். இந்த நிலையில் நேற்று, லோனாவாலாவில் உள்ள கண்டாலாவில் ஒரு பயங்கர விபத்து நடந்தது. ஆனந்த் சனாஸ் மற்றும் சுரேகா சனாஸ் தம்பதியினர் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ் முன் விழுந்தது. அப்போது, அவர்கள் மீது பஸ் ஏறியது. இதில் சுரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.