மது பாட்டிலுக்குள் கிடந்த ஈ.. ஷாக் வீடியோ!

25141பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மதுபான கடையில் நபர் ஒருவர் மது பாட்டில் வாங்கி சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் கடைக்கு திரும்பி வந்த அவர் தான் வாங்கிச்சென்ற மது பாட்டிலுக்குள் ஈ உள்ளது, அது எப்படி சீல் வைக்கப்பட்ட மது பாட்டிலுக்குள் ஈ வரும் என கேள்வியெழுப்பினார். அதற்கு விற்பனையாளர்கள் எங்களுக்கு எப்படி தெரியும்? எங்களுக்கு வரும் பாட்டில்களை நாங்கள் விற்பனை செய்கிறோம். வேண்டுமென்றால் வேறு பாட்டிலை மாற்றி தருகிறோம் வாங்கி செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி