நீதிபதி மீது பாய்ந்த குற்றவாளி.. பரபரப்பு வீடியோ

66371பார்த்தது
லாஸ்வேகாஸில் உள்ள நெவாடா நீதி மன்றத்தில் வழக்கின் விசாரணை ஒன்ற நடந்துகொண்டிருந்தது. டியோப்ரோ ரெட்டன் என்பவருக்கு எதிரான அந்த வழக்கில் நீதிபதி விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். பின்னர் அவர் மீதான வழக்கு நிரூபிக்கப்பட்டது. அப்போது நீதிபதி மேரி கே ஹெல்தாஸ் தண்டனை விவரங்களை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது டியோப்ரோ வேகமாக ஓடி வந்து நீதிபதி மீது பாய்ந்து அவரை தாக்கினார். இதனையடுத்து அருகில் இருந்த காவலர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் டியோப்ரோவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். அப்போது அவர்கள் மீதும் டியோப்ரோ தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி