சட்டென வந்த மாடு.. பிரேக் அடித்த வேன் கவிழ்ந்து விபத்து..

52பார்த்தது
சட்டென வந்த மாடு.. பிரேக் அடித்த வேன் கவிழ்ந்து விபத்து..
திருநெல்வேலி கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 15 பேர் வேனில் சென்னைக்கு நேற்று (மே 25) இரவு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, நான்கு வழிச்சாலையில் ஏடக்கரம்மாள்புரம் என்ற இடத்தில் சாலையின் நடுவே திடீரென மாடு வந்துள்ளது. இதனால், ஓட்டுநர் பிரேக் அடித்தபோது, மழை ஈரத்தின் காரணமாக வேன் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானது. இதில், 5 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி