நியாயவிலைக் கடைகள் நாளை இயங்கும் என அறிவிப்பு

69பார்த்தது
நியாயவிலைக் கடைகள் நாளை இயங்கும் என அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் நாளை (மே 26) இயங்கும் என உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஈடான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பொது வினியோகத் திட்டப் பொருட்களான அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை உரிய காலத்திற்குள் வினியோகம் செய்ய நாளையும் நியாயவிலைக் கடைகள் இயங்கும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி