மதுரையில் 9 வயது மாணவன் குத்திக் கொலை

66பார்த்தது
மதுரையில் 9 வயது மாணவன் குத்திக் கொலை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 9 வயது மாணவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
கத்தப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உருது பயிற்சி பள்ளியில் பயின்று வந்த பீகாரை சேர்ந்த 9 வயது மற்றும் 13 வயது மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 13 வயது மாணவன், 9 வயது மாணவனை கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளான். தொடர்ந்து, சிறுவனின் உடலை கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி