மது போதையில் மனைவி, மகன் மீது தாக்குதல்... வீடியோ!

62பார்த்தது
கோவில்பட்டியில் மது போதையிலிருந்த கணவன், மனைவி மற்றும் மகனை தாக்கும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திவிட்டு 14 வருடங்களாக் தொல்லை கொடுக்கும் கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவர் மது போதையில் உருட்டுக் கட்டையால் தனது மனைவி மற்றும் மகனை கொடூரமாக தாக்கி உள்ளார். இதையடுத்து, புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நன்றி: தந்தி டிவி.

தொடர்புடைய செய்தி