காளான் சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி

8927பார்த்தது
காளான் சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி
மேகாலயா மாநிலம் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சபாய் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காட்டு காளான்களை சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ரிவன்சகா சுசியாங் (8), கிட்லாங் டுசியாங் (12), மற்றும் வான்சலான் சுசியாங் (15) ஆகிய 3 சிறுவர்களும் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி