கார் மீது பைக் மோதிய விபத்தில் நண்பர்கள் பலி

58பார்த்தது
கார் மீது பைக் மோதிய விபத்தில் நண்பர்கள் பலி
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷாம் ரவி (19) மற்றும் ரோஹித் (19). நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வேளச்சேரி மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தனர். அங்கு பழுதாகிய கார் ஒன்று சாலையின் நடுவே நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை கவனிக்காத இளைஞர்கள் வேகமாக சென்று காரின் பின்பகுதியில் மோதினர். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி