கனடாவின் போர்ட் கோக்விட்லாம் பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வந்த ராபர்ட் பிக்டன் (71) என்பவர் சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. அதன்பேரில் அவரது வீட்டில் சோதனை செய்தபோது, பிரிட்ஜில் ஒரு பெண்ணின் உடல் வெட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், 49 பெண்களை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி தனது பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு இரையாக போட்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் இருந்த அவரை, சிறை கைதி கடந்த 19ஆம் தேதி தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.