சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது

84பார்த்தது
சுவாமிமலையில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது



சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமை வகித்தார். இந்த கிரிவலத்தில் சிவத்திரு. திருவருட்செம்மல் இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலமும் நடைபெற்றது. சுவாமிமலை திமுக பேரூர் கழக செயலாளர் பாலசுப்ரமணியன், முன்னாள் கவுன்சிலர் செழியன், தேப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருவிசநல்லூர் வாழைக்காய் கமிஷன் மண்டி மகாலிங்கம் குடும்பத்தினர் அமுது வழங்கினர்.

தொடர்புடைய செய்தி