கல்லணையில் மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

53பார்த்தது
கல்லணையில் மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
கல்லணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் நேற்று கல்லணையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டப் பணிகளையும், கல்லணை கால்வாய் தலைப்பில் நடைபெற உள்ள திட்ட பணிகளின் விவரங்களை கேட்டறிந்தவுடன், பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், காவேரி கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பவளக்கண்ணன், காவிரி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், கல்லணை கால்வாய் உட் கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் திருமாறன், மணிகண்டன் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி