மின்சாரம் சரியாக வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

563பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே மின்சாரம் சரியாக வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி மாதா கோவில் தெருவில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் சரியாக வராததாலும், லோ வோல்ட்டேஜாக வந்ததாலும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து திருக்காட்டுப்பள்ளி - கல்லணை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அறிந்த தோகூர் சப் இன்ஸ்பெக்டர் சேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மேலும் மின்துறை அலுவலரிடம் பேசி நாளை சரி செய்து தரப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரம் சாலை மறியல் மேற்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி