பைக்கில் இருந்து கீழே விழுந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்

77பார்த்தது
பைக்கில் இருந்து கீழே விழுந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்
திருக்காட்டுப்பள்ளி அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனி தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பத்மநாபன் (31) இவர் சம்பவத்தன்று திருக்காட்டுப்பள்ளிக்கு பைக்கில் வந்தவர், பாம்பாளம்மன் கோவில் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார். அவரை உடனடியாக திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்த்தனர். உடல் நிலை சரியாகி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மறுபடியும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 15 ஆம் தேதி இறந்தார். இது குறித்து அவரது மனைவி பிரியங்கா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலதண்டாயுதம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி