பூதலூர் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

62பார்த்தது
பூதலூர் வட்டத்தில் ஜமாபந்தி என்கிற 1433 பசலிக்கான வருவாய் தீர்வாயம் தஞ்சாவூர் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. அகரப்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சரக கிராமங்களுக்கான ஜமாபந்தி நிறைவுற்ற நிலையில் நேற்று செங்கிப்பட்டி சரகத்திற்கான ஜமாபந்தி நடந்தது. கூட்டத்தில் தாசில்தார் மரிய ஜோசப், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜானகிராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செங்கிப்பட்டி சரகத்தைச் சேர்ந்த 17 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி