தஞ்சை: கோபத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது

3343பார்த்தது
தஞ்சை: கோபத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது
தஞ்சையில் பெண்ணை அடித்துக்கொன்ற அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை வண்டிக்காரத் தெரு கருப்பாயி அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் கோபிநாத். பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யா (வயது31). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த கோபிநாத் விளக்குமாறை எடுத்து அதன் கட்டையால் சரண்யாவின் முகத்தில் ஓங்கி குத்தினார். தொடர்ந்து முகத்தில் குத்திகொண்டே இருந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்காமல் சரண்யா சத்தம் போட்டார். |சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சரண்யாவை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று இறந்தார். ஏற்கனவே இது தொடர்பாக கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர். தற்போது சரண்யா இறந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி