ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம்

84பார்த்தது
பேராவூரணி அருகே ஆத்தாளூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மது எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட களத்தூர், தென்னங்குடி, முடப்புளிக்காடு, கழனிவாசல் கிராமத்தினர் மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜசேகரன், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி