தஞ்சாவூரில் 4ம் ஆண்டு இந்திர விழா

56பார்த்தது
தஞ்சாவூரில் 4ம் ஆண்டு இந்திர விழா
தஞ்சாவூரில் இந்திரன் வழிபாட்டு பேரவை, தேவேந்திரர் வணிக மையம் சார்பில் 4ம் ஆண்டு இந்திர விழா நடைபெற்றது.

தஞ்சாவூரில் உள்ள இந்திரன் வழிபாட்டு பேரவை மற்றும் தேவேந்திரர் வணிக மையம் சார்பில் வருடந்தோறும் இந்திர விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் உள்ள இந்திரன் கோயிலில் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலை வர் தினேஷ் பணிக்கர் தலைமை வகித்தார்.
செயலாளர் கிருபானந்தம் பொருளாளர் அம்ரீத் அரசன், திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பு என்கிற
அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பெண்கள்
முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்து பொங்கலிட்டு வழிபட்டனர். அப்போது இந்திரனுக்கு பால், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீப ஆராதனை
காட்டப்பட்டது. விழாவில் கவிஞர் மருதையன் எழுதிய மருத நில மக்களின் ஆன்மீக சிந்தனை என்ற நூல் வெளியிடப்பட்டது விழாவில் துணை தலைவர் புருஷோத்தமன் இணைச்செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி