திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளம் - போக்குவரத்து பாதிப்பு

50பார்த்தது
திடீரென சாலையில்  ஏற்பட்ட பள்ளம் - போக்குவரத்து பாதிப்பு
திருச்சி திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி சாலையில் இன்று திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். ஏற்கனவே இதே பகுதியில் பாதாள சாக்கடையில் ஓட்டை விழுந்து, தற்காலிகமாக சரி செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சாலையில் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து, பள்ளத்தைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி