உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி வாட்சப்பில் வரும்

65பார்த்தது
உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி வாட்சப்பில் வரும்
உச்சநீதிமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 25) பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அந்த விசாரணையின் போது, நீதிபதி சந்திரசூட், 'உச்சநீதிமன்ற தகவல்தொழில்நுட்பச் சேவையில் வாட்ஸ்ஆப் சேவையும் இணைக்கப்படும்' என்று அறிவித்தார். அதன்படி உச்ச நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்.

தொடர்புடைய செய்தி