தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பெரியகோட்டை ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருபவர் சின்னப்பொண்ணு(54). இவர் வீட்டின் கொல்லைப் புறத்தில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து இவர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சின்னப்பொண்ணு வழியிலேயே இறந்து விட்டார். இதுபற்றி மதுக்கூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்