வலையில் சிக்கிய ஆமைகளை கடலில் விட்டவர்களுக்கு பாராட்டு

60பார்த்தது
கடலில் உள்ள அரிய வகை உயிரினங்களான கடற்பசு, ஆமைகள், கடல் அட்டைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீனவர்களின் வலைகளில் சிக்கினால் அவற்றை மீண்டும் கடலில் விடுமாறு மவட்ட வனத்துறையினர் அவ்வப்போது மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக மல்லிப்பட்டினம் கடற்கரைப் பகுதியில், சின்னமனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், சுரேஷ், சத்யராஜ் ஆகியோர் படகில் மீன் பிடித்தபோது அவர்களது வலையில் சுமார் 5 கிலோ எடை கொண்ட அபூர்வ வகை கடல் ஆமை சிக்கியது.
மீன் வலையை கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது, அதில் ஆமை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆமையை மீனவர்கள் மீண்டும், கடலில் விட்டனர்.
அதே போல், சோமநாதன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ், கமல், வீரமணி, சூர்யா, அண்ணாநகர் புதுத்தெருவைச் சேர்ந்த மதன்ராஜ், முத்துராஜா, புதுப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜான், பால்சாமி, சக்தி ஆகியோர் சென்ற படகிலும் ஆமைகள் வலைகளில் சிக்கியது. கரைக்கு வந்து பார்த்தபோது ஆமைகள் இருந்ததால், இந்த ஆமைகளை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு வீடியோ எடுத்து அந்த தகவலை பகிர்ந்து கொண்டனர்.
இதையடுத்து வனச்சரகர் சந்திரசேகரன் கூறியதாவது: வனத்துறை சார்பாக அடுத்த மாதம் நடைபெற உள்ள கடற்பசு தினத்தில் ஊக்க தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி