தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் எஸ். வி. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் சிவேதி ஏஆர். நடராஜன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கீழமை நீதிமன்றத்தில் இ- பில்லிங் முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். பேராவூரணி நீதிமன்றத்திற்கு இடம் ஒதுக்கி தருவதில் காலதாமதம் செய்து அலட்சியம் செய்யும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து, ஏப். 4 முதல் 6 ஆம் தேதி சனிக்கிழமை வரை நீதிமற்றப் பணிகளில் இருந்து விலகி இருப்பது" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.