பேராவூரணி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க முடிவு

70பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் எஸ். வி. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் சிவேதி ஏஆர். நடராஜன் வரவேற்றார்.  

இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.  


இக்கூட்டத்தில், கீழமை நீதிமன்றத்தில் இ- பில்லிங் முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். பேராவூரணி நீதிமன்றத்திற்கு இடம் ஒதுக்கி தருவதில் காலதாமதம் செய்து அலட்சியம் செய்யும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து, ஏப். 4 முதல் 6 ஆம் தேதி சனிக்கிழமை வரை நீதிமற்றப் பணிகளில் இருந்து விலகி இருப்பது" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி