கரம்பயம் துணைமின் நிலையத்துக்கான பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டு குடிநீர் ஆகிய மின்பாதைகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.