தஞ்சை மாவட்டத்தில் 1, 751 மது பாட்டில்களுடன் 24 பேர் கைது

85பார்த்தது
தஞ்சை மாவட்டத்தில் 1, 751 மது பாட்டில்களுடன் 24 பேர் கைது
தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் எந்தவித குற்றச்செயல்களும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் 114 அதிவிரைவுப்படை உருவாக்கப்பட்டு பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக மது
பாட்டில்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திருவையாறு,
பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு,
பட்டுக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் நேற்றும், நேற்றுமுன்
தினமும் தொடர் சோதனை நடத்தப்பட்டன. இதில் 24 பேர்
கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 1, 751 மது பாட்டில்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு
கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையானது இனிவரும் நாட்களில் மிக
தீவிரமாக இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி