மோட்டார் சைக்கிளில் வந்து  பெண்ணிடம் கைவரிசை காட்டியவர் கைது

554பார்த்தது
மோட்டார் சைக்கிளில் வந்து  பெண்ணிடம் கைவரிசை காட்டியவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் ஊராட்சி, கோவில் பத்து பகுதியில் குடியானத் தெருவில் வசிக்கும் வேலுசாமி, இவரது மனைவி அகிலா (38). ஜூன் 16 ஆம் தேதி அகிலாவும் வேலுசாமியும் இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு கபிஸ்தலம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவர்களை இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து பின்னே உட்கார்ந்து வந்த அகிலாவின் கையில் இருந்த பேக்கை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்கள். அகிலா உடனடியாக இச்சம்பவம் குறித்து கபிஸ்தலம் காவல்நிலத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து பெண்ணிடமிருந்து பேக்கை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் கபிஸ்தலம் அருகே உள்ள துரும்பூர் கடைத்தெருவில் காவலர்கள் ரோந்து பணிக்கு சென்ற பொழுது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிள் அதிவேகமாக சென்ற ஒருவரை வழிமறித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர் தேவனோடை மேலத்தெரு மாயமூர்த்தி மகன் ஜெயசூர்யா (21) என்பது தெரியவந்தது. மேலும் அவர்தான்அகிலாவின் பேக்கை பிடிங்கி சென்றார் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் திருடி சென்ற செல்போன், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி