தா. பழூர்: பாலத்திற்கு அடியில் பிணமாக கிடந்த நபர்

9172பார்த்தது
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே உள்ள மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றின் கரையிலிருந்து தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் நீலத்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் அப்பாலத்தின் கீழ் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் படுத்திருந்ததையும் அவர் அருகில் பூச்சி மருந்து பாட்டில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள்  தா. பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் அருகே சென்று பார்த்த போது  முதியவர் ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்தது. இதனையடுத்து இறந்து போன முதியவர் தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் போலீஸ் சரகம் மருதநல்லூர் கருப்பூர் அருவேலி கீழத்தெருவை சேர்ந்த பக்கிரி மகன் சுந்தரமூர்த்தி(60) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது குடும்பத்தாருக்கு  அவரது இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தா. பழூர் போலீசார்  மருந்து குடித்து இறந்து போன முதியவர் சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி