மதவெறி பிடித்த சனாதன வகுப்புவாத பாசிச சக்திகள் தோற்கும்

54பார்த்தது
மதவெறி பிடித்த சனாதன வகுப்புவாத பாசிச சக்திகள் தோற்கும்
மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், பன்னாட்டு நிதி மூலதனத்தோடு இணைந்து கொண்டு, போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. புதிய வழிமுறையில் இரக்கமற்ற உழைப்புச் சுரண்டல் அனுமதிக்கப்படுகிறது. மதவெறி பாசிச சக்திகள் அதிகாரத்தில் நீடிப்பது பேராபத்து என்பதை வாழ்க்கை உணர்த்தும் படிப்பினையாகும். வகுப்புவாத, சனாதன பாசிச சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றி அதிபயங்கர ஏகாதிபத்திய சக்திகளை முறியடிப்போம். வகுப்புவாத, பாசிச சக்திகளை தோற்கடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி