ஜப்பானில் வியாழக்கிழமை பயங்கர
நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் குரில் தீவுகளில் பூமி திடீரென குலுங்கியது. இந்த
நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் சொத்து சேதமா அல்லது உயிர் சேதமா என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது.